சுகாதார சீர்கேடு

Update: 2023-03-19 09:41 GMT
கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஆதி திராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்