தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-12 10:19 GMT

தஞ்சை வடக்குவீதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்