சாக்கடை கால்வாயில் அடைப்பு

Update: 2023-03-12 09:33 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ. பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீர் செல்ல முடியாமல் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்