தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-08 12:51 GMT

திருச்சி 39-வது வார்டு காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள தஞ்சை மெயின்ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்