குழந்தைகள் நல மைய வளாகத்திற்குள் கழிவுநீர்

Update: 2023-03-05 11:33 GMT

குழந்தைகள் நல மைய வளாகத்திற்குள் கழிவுநீர்

திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனி பகுதியில் செயல் பட்டு வரும் குழந்தைகள் நல மையம் வளாகத்திற்குள் நெசவாளர் காலனி பள்ளியின் கழிவுநீர் வெளியேறி குழந்தைகள் நல மைய வளாகத்திற்குள் தேங்கியுள்ளதால் குழந்தைகளை இந்த கழிவுநீருக்குள் பெற்றோர்கள் சிரமத்துடன் அழைத்து போகும் நிலையில் உள்ளது. மேலும் பல நாட்களாக இங்கு கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

ராஜேஷ்,நெசவாளர் காலனி.

7708165057

மேலும் செய்திகள்