பாதாள சாக்கடை குழிகள் மூடப்படுமா?

Update: 2023-03-05 11:13 GMT

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள சாலையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் நடுவே ஆங்காங்கே பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடைபாதையில் நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதையில் உள்ள பாதாள சாக்கடை குழிகளை மூடிட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்