கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-01 13:54 GMT


திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள பொது கழிவறை பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கூத்தனூர்

மேலும் செய்திகள்