தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-20 13:41 GMT

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் இருந்து ரெட்டியபட்டி செல்லும் சாலை இடது புறம் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்