கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-25 10:34 GMT

கோவை இடையர்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள சாக்கடை கால்வாய் குப்பைகள் கொட்டப்பட்டு மூடி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்