வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-08 17:01 GMT

சேலம் தளவாய்ப்பட்டி பகுதியில் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்ப்பட்டி ஹவுஸிங் போர்டு வாய்க்கால் உள்ளது. சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழை தண்ணீர் இந்த வாய்க்கால் வழியாக சென்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பயன் அளிக்கிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மழை தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இந்த வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்