கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 14:04 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் மகாமகக் குளம் அருகில் காந்தியடிகள் சாலையில் உள்ள சந்தில் சாக்கடைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிவு நீர் தேங்கிதுர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கும்பகோணம்.

மேலும் செய்திகள்