கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-11-30 14:53 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி முன்பு கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் குப்பைகள் பறந்து பள்ளி வளாகத்திற்குள் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பூதலூர்.

மேலும் செய்திகள்