தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-13 13:05 GMT

திருத்துறைப்பூண்டியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் திருவாரூர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதுடன் தொற்றுநோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சுத்தம்செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்