ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-11-13 10:07 GMT

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனி தென்வடல் 3-வது வீதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. இதனால் அந்த வடிகால் வழியாக மழைநீரோ, கழிவுநீரோ வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. மேலும் வீடுகளுக்குள் நுழைந்து வருகிறது. சிலரின் ஆக்கிரமிப்பு செயலால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தர அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்