சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-11-09 13:56 GMT


தஞ்சை-நாகை சாலையில் உள்ள சோழன் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சோழன்நகர்

மேலும் செய்திகள்