கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-11-09 13:41 GMT


திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள பள்ளிக்கூட வாசலில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்