தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-09 13:01 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி கெம்ப்ஸ்டவுன் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்