மதுரை கோ.புதூர், அழகர்கோவில் சாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் மோட்டார் மூலம் சிலர் கழிவுநீரை விடுகின்றனர். இதனால் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வீட்டின் கழிவறையில் தேங்கி விடுகிறது.இதனால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.