மூடி இல்லாத பாதாள சாக்கடை

Update: 2022-11-06 13:24 GMT
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெரு அஸ்வின் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி முற்றிலும் சேதமடைந்து பல்லமாக காணப்படுகிறது. இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் இதில் தவறி விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்