கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2022-11-02 13:29 GMT

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இது தவிர மழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்