கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-11-02 13:24 GMT

கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடத்தின் அருகே செல்லும் கால்வாயை சிலர் அடைத்து கடைகள் அமைத்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த அடைப்பின் காரணமாக கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வெளியேறி அருகிலுள்ள கடைகளில் புகுந்து விடுகிறது. இதனால் கடை வியாபாரிகள் சிரமப்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்