பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-10-26 15:09 GMT


தஞ்சை கொண்டிராஜ பாளையம் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் செல்வதற்கு வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொண்டிராஜபாளையம்

மேலும் செய்திகள்