தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-07-16 07:20 GMT

அழகியபாண்டியபுரம் பேரூராட்சி உட்பட்ட பிளவக்கல்விளை பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீருடன் சாக்கடையும் சேர்ந்து தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், அந்தபகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தெருவில் சாக்கடை நீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிராங்கிளின் கனிஷ்குமார், எட்டாமடை.

மேலும் செய்திகள்