சாக்கடையால் சுகாதாரக்கேடு

Update: 2022-10-19 13:59 GMT
புதியம்புத்தூர் கிராமம் ராஜம்மாள் நகரில் (புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி செல்லும் பிரதான சாலையின் அருகில்) சாக்கடை திறந்த நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் குழாயும் அதன் அருகில் அமைந்துள்ளதால் துர்நாற்றத்திற்கு மத்தியில் சிரமத்துடன் தண்ணீர் பிடிக்கிறார்கள். சாக்கடையில் குப்பைகள் அதிகமாக சேருவதால் மழை நேரங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது. இதனால் கொசுத்தொல்லையும் உள்ளது. எனவே காங்கிரீட் சாக்கடை கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்