தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-16 14:02 GMT

கோவை வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் கருப்புசாமி முதலியார் சாலை சந்திப்பில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்