சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-10-09 17:46 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு புதூர் தெருவில் கடந்த 5 வருடங்களாக சாலையில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. மழைகாலங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மலேரியா போன்ற காய்ச்சலால் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இந்திராணி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்