திருப்பூரின் பிரதான ரெயில்வே மேம்பாலம் டி.எம்.எப். மருத்துவ மனை அருகில் உள்ளது. இந்த ரெயில்வே சுரங்க பாலம் போலீஸ் குயிருப்பையும்,, லட்சுமி நகரையும் இணைக்கிறது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மழை காலங்களில் இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும். பாலத்தின் தரை பகுதி பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த பாலம் கட்டி மூடிக்கப்பட்டு ஓராண்டுதான் இருக்கும். அதற்குள் பாலத்தின் தரை பகுதி பல இடங்களில் பழுதாகி விட்டது. மேலும் பாலத்தில் கழிவு நீர் தேங்கிநிற்கிறது. எனவே இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-------