சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-24 15:44 GMT
பெங்களூரு மத்திகெரே எச்.எம்.டி. சாலையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையின் ஓரத்தில் இருந்த பாதாள சாக்கடை கால்வாய் மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை கால்வாய் மூடி அமைத்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்