சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2022-09-22 16:50 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலத்துப்பட்டி 11-வது வார்டு பாரதிநகர் 2-வது தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாயை சுற்றி புதர் மண்டி காணப்படுவதால் கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. எனவே இந்த செடி கொடிகளை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வாற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேட்டு, பாரதி நகர், சேலம்.

மேலும் செய்திகள்