சாலையில் ஆறாக வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-09-21 15:06 GMT
பெங்களூரு தொட்டகம்மனஹள்ளி ரோட்டில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி உடைந்து உள்ளது. இதனால் அந்த ரோட்டில் சாக்கடை கழிவுநீர் ஆறாக வழிந்தோடுகிறது. அந்த ரோட்டை தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிவுநீரால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. மக்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் நடந்து செல்கின்றனர். அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் உடைந்து கிடக்கும் சாக்கடை கால்வாய் மூடியை சரிசெய்து சாக்கடை கால்வாயை மூட வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்