பொது கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2022-09-19 16:43 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசிராமணி பேரூராட்சி 13-வது வார்டு ஒடசக்கரை கூலான்காடு அருந்ததியர் தெருவில் உள்ள பொது கழிப்பிடத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து 1 மாத காலமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே உடனடியாக இந்த பொது கழிப்பிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தகுமார், சேலம்.

மேலும் செய்திகள்