சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-18 14:08 GMT
விக்கிரவாண்டி அருகே அய்யூர் அகரம் கிரமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு சந்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் அங்கு மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்