விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் கீழகோட்டையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி டெங்கு போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் வாருகாலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.