சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-09-14 15:27 GMT
பெங்களூரு ஆஸ்டின் டவுன் லிண்டன் தெருவில் அரசு உருது பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் அருகே உள்ள சாலையில் சாக்கடை கால்வாய் மூடி உடைந்து போனதால் கடந்த 10 நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த கழிவுநீரை மிதித்து கொண்டு தான் மாணவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய உடைந்து கிடக்கும் சாக்கடை கால்வாய் மூடி சரிசெய்யப்படுமா?


மேலும் செய்திகள்