கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் ஓடுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து ராயக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-கவின், கிருஷ்ணகிரி.