அடிக்கடி வெளியாகும் கழிவுநீர்

Update: 2022-09-08 12:06 GMT

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் குருமூர்த்தி அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் எதிரில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் வாகனங்கள் செல்லும் போது அந்த வழியாக செல்வோர் மீது படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்