விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பஞ்சாயத்து 7-வது வார்டில் வாருகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. ஆதலால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிக்கு வாருகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.