சாலையோரம் ஆபத்து

Update: 2022-09-04 12:27 GMT

குளச்சல் நகராட்சி உள்பட்ட கள்ளியடைப்பு பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் ஓடை சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலாப் உடைந்து பள்ளமாக காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். எனவே, போராபத்து ஏற்படும் முன்பு ஓடையின் மூடியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாகிர், குளச்சல்.


மேலும் செய்திகள்