கழிவுநீர் வெளியேற ஏற்பாடு தேவை

Update: 2022-09-04 09:08 GMT

மணவாளக்குறிச்சி புதுக்கடை தெரு, ஆசாரிதெரு, காந்திநகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சென்று கொண்டிருந்தது. தற்போது அதிகாரிகள் வடிகாலில் வரும் கழிவுநீர் குழாைய அடைத்து விட்டனர். இதனால், கழிவு நீர் போகாமல் வீட்டு வளாகத்தில் தேங்கி நின்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறிதளவு நிலம் உள்ளவர்கள் பழைய வீட்டின் அருகே உறிஞ்சி குழி தோண்டினால் வீடு இடியும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி கழிவு நீர் போக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜேஷ், புதுக்கடை தெரு.

மேலும் செய்திகள்