சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையின் முன்பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?