கழிவுநீர் கால்வாய் இல்லை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பாரியூர் அம்மன் நகரில் உள்ள வீடுகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.இதனால் இப்பகுதியில் குடி இருப்பவர்கள் தங்களது வீடுகள் முன்பு பெரிய குழிகளை வெட்டி அதில் கழிவுநீரை சேமித்து வருகின்றனர்.இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மனோகர்அருண்,பாரியூர் அம்மன்நகர்.
9442047067