சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதி அண்ணா நகர் பிரதான சாலையை இணைக்கும் வாய்க்கால் உடைந்து மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.