கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.