விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சுரங்க ெரயில் பாதை வழியாக செல்லும் முக்கிய சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடியானது சேதமடைந்துள்ளது. இதில் இருந்து கழிவுநீரானது வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.