தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-08-24 10:17 GMT

தாராபுரம் 14-வது வார்டு நேரு நகர் என்கிற நேதாஜி தெருவில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிகரித்து விட்டது. இரவு நேரங்களில் மட்டுமல்ல பகல் நேரத்திலும் கொசு தொல்லை அதிகமாகி விட்டது. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. அந்த அளவுக்கு சாக்கடை நீரின் துர்நாற்றம் மயக்கம் வரும் அளவுக்கு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்