கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக விவசாயத் தோட்டத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி வகைகளை அகற்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் தாராளமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.