சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-19 17:07 GMT

சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் ஆற்காடு அடுத்த வேப்பூாில் உள்ள ஒரு மண்டபம் அருகில் நான்கு வழி சாலையில் பாலம் கட்டும் பணி நடப்பதால் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் செல்கின்றன. அந்தச் சர்வீஸ் சாலை தொடக்கத்தில் நடு ரோட்டில் அரை அடிக்கும் மேல் பள்ளம் உள்ளது. இதனால் இரவில் வருவோர் தடுமாறி விழும் அவலம் நடக்கிறது. அந்தப் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.வெங்கடேசன், வாலாஜா. 

மேலும் செய்திகள்