ஆற்காடு நகருக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரி நேரங்களில் வெளியூர்களில் இருந்து வாகனங்கள் தேவையின்றி ஊருக்குள் வந்து செல்வதால் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. ஆற்காடு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க திட்டமும் உள்ளது. இதைத் துரிதப்படுத்தி உடனடியாக புறவழிச்சாலை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
-சரவணக்குமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.