திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளிக்கு செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் வேகத்தடைகள் உள்ளன. அத்துடன் சாலையின் இருபக்கமும் மரங்கள் உள்ளன. இதனால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும், சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்டு அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், திருப்பத்தூர்.