திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம்-அத்திப்பாடி செல்லும் சாலையில் புதிதாக தார் ஊற்றப்பட்டது. தற்போது போடப்பட்ட தார் சாலை உயரமாக உள்ளது. எதிர் எதிரே 2 கனரக வாகனங்கள் மாறி செல்லும்போது சாலை சிதைய வாய்ப்புள்ளது. ஆகையால் சாலையோரம் மண் அணைக்க நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-வரதராஜன், வாணாபுரம்.